×

தஞ்சாவூர் அருகே பயங்கரம்: பழ வியாபாரி வெட்டி படுகொலை: 5 பேரிடம் விசாரணை


வல்லம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மோதிலால் தெருவை சேர்ந்த முருகன் மகன் அப்பு (எ) ஹரிஹரன் (26). நீடாமங்கலத்தில் பழக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நீடாமங்கலத்தை சேர்ந்த வினோத் (24) என்பவரது லோடு ஆட்டோவில் அப்பு மற்றும் ராஜமுருகன் (19) ஆகியோர் திருச்சிக்கு பழங்கள் ஏற்றி வருவதற்காக சென்று கொண்டிருந்தனர். லோடு ஆட்டோவை வினோத் ஓட்டி வந்தார். அப்போது தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் பைபாஸ் பகுதியில் லோடு ஆட்டோ சென்ற போது பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், வினோத் முகத்தில் மண்ணை வீசினர். தொடர்ந்து அவரை அரிவாளால் முதுகில் வெட்டினர்.

இதில் நிலைகுலைந்து போன வினோத் லோடு ஆட்டோவை நிறுத்தினார். இதில், அதிர்ச்சியடைந்த ராஜமுருகன் லோடு ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவரும், லோடு ஆட்டோவில் இருந்து அப்புவை வெளியில் இழுத்து தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் ரத்த வெள்ளத்தில் அப்பு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அப்புவின் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் வினோத்தை சிகிச்சைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வியாபாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது என்று போலீசார் கூறினர்.

வாலிபர் வெட்டி கொலை: போலீசுக்கு வலை
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் மைனர். சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி துரைச்சாமிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாலதிக்கும் அதேபகுதியை சேர்ந்த சரவணன்(36) என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெரு நகராட்சி பொது கழிப்பிடம் அருகே சரவணன் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மைனர், அவரது தம்பி பாண்டியராஜன், நண்பர் அழகுராஜ் ஆகியோர் சேர்ந்து, சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டிகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதில், பாண்டியராஜன், அழகுராஜ் கைது செய்யப்பட்டனர். மைனரை தேடி வருகின்றனர்.

The post தஞ்சாவூர் அருகே பயங்கரம்: பழ வியாபாரி வெட்டி படுகொலை: 5 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Murugan ,Appu (A) Hariharan ,Needamangalam Motilal Street, Tiruvarur District ,Needamangalam ,Vinod ,Appu ,
× RELATED போலி போலீஸ் கைது